ஏ நீ கடற்க்கரைல போய் சங்கு பாத்திருப்ப நாங்கலாம் கழுத்தறுத்து சங்கு சங்குபாக்குரவைங்க ,எங்க கிட்டேவா ஏ நாங்கலாம்.... ,ஏ சீண்டாத சீண்டுனேன் சீரளிஞ்சுடுவ ,என்று வசனங்களை வாய்கிழிய பேசிகொண்டிருந்த முற்பட்ட நாட்கள் வரை நான் பம்பரம்தான் விளையாடிகொண்டிருந்தேன் கால்சட்டை பையில் எப்போதும் புடைத்து கொண்டிருக்கும் பம்பரத்துடனான சாட்டை வால்போல் வெளியில் தொங்கி கொண்டிருக்கும் ,அது ஒரு சீசன் விளையாட்டு ,
ஒளிஞ்சு புடுச்சு என்று தொடங்கிய எனது வெளிபுற விளையாட்டு கொண்டாட்டம் தொட்டு புடுச்சு , கிட்டி புள்ள , பம்பரம், கோலிகுண்டு ,நாடு , செவன் சாட் , எறிபந்து, கடைசியாக மட்டை பந்து என நீண்ட பரிணாமத்தை கொண்டது , எங்கள் வீட்டில் பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுள்ள இவை மூன்றும் விளையாட கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது , மறைந்து மறைந்து விளையாடுவேன் ,ஏனென்றால் அவைகள் சேரிப்பய விளையாட்டாம் , கட்டுப்பாட்டை கட்டுடைத்தேன் ,சரிவிடு பம்பரம்தானே அதுவும் நம்ம தெருவில்தானே என அப்பா ஆதரவு தெரிவிக்க ,அதன் பிறகு போய் தொல என அப்போதே தண்ணியை தொழித்து விட்டார்கள் , அப்பறம் என்ன வீட்டை விட்டு வெளியில் வந்தால் கோலிகுண்டு அல்லது பம்பரம் என எதாவுது ஒன்றோடுதான் வெளியில் வருவேன் ,ஆனால் பம்பரம்தான் அதிகமாக விளையாடியது ,தெரு முக்கில் , யார் வீட்டு வாசலிலாவுது, சில காலி இடத்தில் ,என தொடர்ந்தோமென்றால் அன்று முழுவதும் விளையாடுவோம் ,